கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிக்கிறது – ஆய்வில் தகவல்!

Published by
Rebekal

கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிப்பதுடன், உயிரிழப்பிலிருந்து 98% பாதுகாப்பளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93 சதவீத பாதுகாப்பையும், உயிரிழப்பிலிருந்து 98 சதவீத பாதுகாப்பையும் அளிக்கிறது என இராணுவ  மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அவர்கள் 15 லட்சம் மருத்துவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவில் இருந்து அதிகம் பாதுகாப்பை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

29 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

3 hours ago