மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Default Image

மேற்கு வங்கத்தில் கொரோனா ஊரடங்கு வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது குறைந்து இருந்தாலும், பல மாநிலங்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் தான் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசுகள் சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தற்போதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு கை நீட்டிப்பு செய்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசியமான சில செயல்பாடுகளை தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்