தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது.
உலகளவில் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான் என்றும் அதுவும் ஒரு வருடம் கால அவகாசம் ஆகும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் 31,53,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2,18,743 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்களில் 9,64,896 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 10,35,765 பேர் பாதிக்கப்பட்டு, 59,266 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,42,238 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்து பாதிப்பு தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேர் பாதிக்கப்பட்டு, 400 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…