Categories: இந்தியா

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்..! போலீசார் தீவிர விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று மாலை (திங்கள்கிழமை) அவரது டெல்லி இல்லத்தில் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சரின் அலுவலகம், இது குறித்து டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது.

இதன் பின்னர் டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்பு தொடர்பான தகவலை அமைச்சரின் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் வட்டாரங்களின்படி, விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்த ஆண்டில் நிதின் கட்கரிக்கு அவரது அலுவலகத்தில் கொலை மிரட்டல் அழைப்பு வருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஜனவரியில், மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு இதுபோன்ற அழைப்புகள் வந்ததாகவும், அழைப்பாளர் கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் என நாக்பூர் போலீசார் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சிறையிலிருந்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. அழைப்பாளர் ஒரு பிரபல குண்டர் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேஷ் காந்தா, பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் சட்டவிரோதமாக போனை பயன்படுத்தி கட்காரியின் அலுவலகத்தை மிரட்டினார் என்று நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago