டெல்லி :கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீட்பு.! கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10K ஆக குறைந்தது.!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,100க்கும் மேற்பட்டோர் மீண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,887ஆக குறைந்துள்ளது.
அதாவது, டெல்லியில் 1,32,275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து 1,17,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே டெல்லியின் மீட்பு விகிதம் 88.9% ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,881 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியால் நிலைமை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது டெல்லியில் 1.3 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனை தாண்டி அமெரிக்க மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025