நிர்பயா குற்றவாளிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு காப்பாற்ற நினைக்கிறது! – பாஜக கடும் தாக்கு!

Published by
மணிகண்டன்
  • நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.
  • டெல்லி மாநில அரசு குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பதாக டெல்லி பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனையை தெரிவிக்கவில்லை. திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு தண்டனையை கூற வேண்டும். ஆனால் டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு இதனை செய்யவில்லை. நீதிமன்ற விதிமுறைகளை மீறியுள்ளது என டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், டெல்லி காவல்துறை மட்டுமே மத்திய அரசு வசம் உள்ளது. ஆனால், டெல்லி திகார் சிறை நிர்வாகம் டெல்லி மாநில அரசு வசமே உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி அரசு, நீதிமன்ற விதிமுறையை மீறியுள்ளது. எனவும், நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறது எனவும் தனது கண்டனத்தை அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மனோஜ் திவாரி பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 seconds ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

18 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

1 hour ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago