Categories: இந்தியா

திகார் சிறையில் சரணடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Published by
Castro Murugan

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரணடைந்தார்.

லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதற்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று திகார் சிறையில் சரணடைந்தார்.

கடந்த மே 10 அன்று உச்சநீதிமன்றம் டெல்லி மதுவிலக்கு கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. மேலும்  ஜூன் 2 அன்று சரணடையுமாறு அறிவுறுத்திருந்தியதை தொடர்ந்து இன்று  சரணடைந்துள்ளார்.

சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால், “நான் ஊழலில் ஈடுபட்டதற்காக அல்ல, ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக சிறைக்கு திரும்புகிறேன்” என்றார். சிறைக்கு செல்லும் முன்னர், கெஜ்ரிவால் மகாத்மா காந்தியின் நினைவிடம் ராஜ்காட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோவிலுக்கும் சென்றார். கெஜ்ரிவால், உடல்நலக் காரணங்களை முன்வைத்து நேற்று ஜாமீன் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு உடனடி ஜாமீன் கிடைக்கவில்லை.

“இந்த முறை தனக்கு என்ன வகையான சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரியவில்லை. இவர்கள் இந்த முறை என்ன செய்வார்கள் எனக்கு தெரியவில்லை. நாங்கள் பகத்சிங்கின் சீடர்கள், நாட்டை காப்பதற்காக சிறைக்கு செல்கிறோம். அதிகாரம் ஆதிக்கமாக மாறும்போது, சிறை செல்லுவது ஒரு பொறுப்பாகிறது” என்று அவர்  கூறினார்.

Published by
Castro Murugan

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

21 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

58 minutes ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago