டெல்லி நீதிமன்றம் : திடீரென்று வெடித்து சிதறிய மர்ம பொருள் ...!

The Rohini court in Delhi has been rocked by a sudden eruption of a mysterious object.

டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் திடீரென்று மர்ம பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கம் போல அனைவரும் பணிக்கு வந்து வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென நீதிமன்ற வளாகத்தினுள் மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகில் இருந்த சில பொருட்கள் மற்றும் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லப்டடாப் பையில் வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.