தலைநகரை ஆளப்போவது யார்…துவங்கியது வாக்கு எண்ணிக்கை… 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்…

Published by
Kaliraj
  • டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 முதல் சுமார் 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லிக்கு  சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. இங்கு பதிவான வாக்குகள் 22 வாக்கு எண்ணும் மையங்களில் நடக்கிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் மதியத்திற்குள் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். இந்த தேர்தலில், ஆளும் ஆம்ஆத்மி, காங்கிர்ஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவுகள் மூலம் யார் உண்மையில் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
Kaliraj

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

15 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

52 minutes ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago