டெல்லியில் 24 மணி நேரத்தில் 12,000 பேருக்கு கொரோனா;319 பேர் உயிரிழப்பு

Default Image

கொரோனாவின் சுனாமி தாக்குதலில் சிக்கித்தவிக்கும் டெல்லி மக்கள் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்டோர் பலி.

இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் கொரோனா அதன் தாக்கத்தை சற்று கூட குறைக்காமல் கோர தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இதனால் பல்வேறு மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12,651 ஆக பதிவாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 319 ஆக பதிவாகியுள்ளது, மேலும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றிருந்த 13,306 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையிலான தொற்று பாதிப்பு 13,36,218 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 19,663 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 12,31,297 எனவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 85,258 பேர் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts