1000 நாட்களில் 20 லட்சம் பேருக்கு வேலை.! நவீனமயமாகும் 4.5 லட்சம் கிராமங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கிராமங்கள் நவீனமயமாக்குவதால் 1000 நாட்களில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

இதுகுறித்து பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று கூறுகையில், அடுத்த 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து, கிராமங்கள் டிஜிட்டல் மயமாகும் என தெரிவித்திருந்தார். மேலும், இதன் முக்கிய நோக்கமே கிராமத்தினர், அரசு அலுவலகங்கள் போன்றவைகளுக்காக நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் கிராமங்களை நவீனமயமாக்குவதே ஆகும்.

இதன் மூலம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்திருந்தார். இவை அடுத்த 1,000 நாட்களில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ஏற்கனவே தற்போது வரையில் இந்தியாவில் சுமார் 1.5 லட்சம் கிராமங்கள் ஆப்டிகல் பைபர் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்ததாக மீதமுள்ள 4.5 லட்சம் கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் திட்டம் நிறைவடையும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கிராமங்களின் தோற்றம் எவ்வாறு மாறும் : 

இந்த கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் வந்தவுடன், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுவான சேவை மையம் திறக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது சேவை மையத்தின் (சி.எஸ்.சி) தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் தியாகி தெரிவித்துள்ளார். ஒரு பொதுவான சேவை மையத்தைத் திறப்பதன் மூலம் குறைந்தது 5 பேருக்கு வேலை அளிக்கப்படும். அதன்படி, குறைந்தது 20 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பொது சேவை மையம் (CSC) திறக்கப்படுவதால்  திறக்கப்படுவதால், கிராமவாசிகள் கல்வி முதல் சிகிச்சை வரை பல வசதிகளைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் ஒவ்வொரு வேலைக்கும் நகரத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம அளவிலான தொழில்முனைவோர் (village level entrepreneur) நியமிக்கப்படுவார். அவர்கள், கிராமவாசிகளின் பயிர்களை வீட்டிலேயே விற்க ஏற்பாடு செய்வார்கள். மேலும் வங்கி வசதியும் கிராமங்களில் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்.

ஆப்டிகல் ஃபைபரின் நன்மை :

ஆப்டிகல் ஃபைபர் வருவதால், இணையத்தின் வேகம் கிராமங்களில் அதிகரிக்கப்படும் என்றும் டெஸ்க் டாப்பை இயக்குவது எளிதாக இருக்கும் என்று தினேஷ் தியாகி கூறினார். கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களது தயாரிப்புகளை இ-காமர்ஸ் மூலம் விற்க முடியும். கிராமங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைக்கு அரசின் மின் சந்தையில் சேர்க்க அரசு அவர்களை அனுமதிக்க முடியும். ஆனால், இணைய வேகம் வேகமாக இருக்கும்போது மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும். இது ஆப்டிகல் ஃபைபர் மூலம் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் :

அனைத்து கிராமங்களையும் ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கும் பணிகள் பாரத்நெட் திட்டத்தின் கீழ் நடந்து வருகின்றன. இதனால், தற்போது 4.5 லட்சம் கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங் பதிப்பது, அடுத்த 1000 நாட்களில் நிறைவடையும் என்று பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று அறிவித்திருந்தார். எனவே, நிச்சயமாக இந்த பணி சரியான நேரத்தில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. நாட்டை தன்னம்பிக்கை கொள்ள, நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஆப்டிகல் கேபிள் மூலம் இணைய வசதி அவசியம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago