எங்கள் மீது தாக்குதல் வேண்டாம்.! போலீஸ்க்கு பூ கொடுத்த மாணவி.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதா நாடு முழுவது கலவர களமாக இருக்கிறது. இதன் விளைவாக, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியின் பல இடங்களில் 144 தடைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • டெல்லியில் நடந்த மாணவர்  போராட்டத்தில் ஒரு போலீஸ்காரருக்கு ரோஜா பூவை கொடுத்து எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் உரிமைக்காக போராடுகிறோம் என கூறிய ஒரு மாணவி.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் அவர்கள் மீது தடியடி நடத்தியும், போராட்டத்தை அவர்கள் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானோர் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா என்ற பல்கலை கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் தொடர் போராட்டம் காரணமாக கர்நாடக, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சில பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்ட களத்தில் இருந்த ஒரு மாணவி அனைவரையும் கவரும் வகையில் ஒரு நிகழ்வை செய்தார். அது என்னவென்றால் போராட்டத்தில் போலீசார்கள் தடியடி அடித்ததால் அந்த மாணவி எங்கள் உரிமைக்காக அமைதியான நிலையில் தான் போராடுகிறோம், எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாக அந்த பெண்ணை தாக்க வந்த போலீசாருக்கு ஒரு ரோஜா பூவை கொடுத்து மனதால் கட்டிப்போட்டார். இச்சம்பவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

1 hour ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

3 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

3 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

4 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

5 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago