அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் துபாய்க்கு ஜூலை 26 வரையில் இயக்கப்படுகின்றன.
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனமானது தற்போது கூடுதலாக இந்தியாவில் நான்கு நகரங்களில் இருந்து விமானங்களை துபாய்க்கு இயக்க திட்டமிட்டுள்ளது.
ஜூலை 12 முதல் ஜூலை 26 வரையில் இந்த சிறப்பு விமான சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் நகரங்களை தவிர, மேலும், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் அனுமதிக்க விடுவதாக விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி குறிப்பில் கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து இரு திசைகளிலும் அதாவது, துபாயிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து துபாய்க்கும் தகுந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால், பெங்களூர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானங்களானது, இந்தியாவிலுள்ள பயணிகளை மட்டுமே ஏற்றி செல்லும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…