அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் துபாய்க்கு ஜூலை 26 வரையில் இயக்கப்படுகின்றன.
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனமானது தற்போது கூடுதலாக இந்தியாவில் நான்கு நகரங்களில் இருந்து விமானங்களை துபாய்க்கு இயக்க திட்டமிட்டுள்ளது.
ஜூலை 12 முதல் ஜூலை 26 வரையில் இந்த சிறப்பு விமான சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் நகரங்களை தவிர, மேலும், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் அனுமதிக்க விடுவதாக விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி குறிப்பில் கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து இரு திசைகளிலும் அதாவது, துபாயிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து துபாய்க்கும் தகுந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால், பெங்களூர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானங்களானது, இந்தியாவிலுள்ள பயணிகளை மட்டுமே ஏற்றி செல்லும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…