நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ! முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து -இந்தியன் ரயில்வே

Published by
Venu

ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக  முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து  செய்யப்பட்டுள்ளது .
கொரோனா காரணமாக இந்தியாவில் முதலில் ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் இந்தியன் ரயில்வே ஏப்ரல் -15 முதல் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்தது.இதன் விளைவாக பலரும் முன்பதிவு செய்தனர்.ஆனால் நேற்றுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில் பிரதமர் மோடி மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
எனவே நாட்டில் உள்ள பேருந்து ,ரயில், விமான சேவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் அனைத்து முன்பதிவுகளும் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.எனவே இன்று முதல் ரயிகளில் பயணிப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுளள்து.ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜூன் 3-ஆம் தேதி கவுண்டர்களின் திருப்பபெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு தற்போது திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago