ஃபேஸ்புக்கில் கூடா நட்பு பத்தாம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த நவீன் ரெட்டி என்பவர் மகபூப்நகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை பேஸ்புக் மூலம் கண்டறிந்து அவருடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். பின்னர், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
சங்கராயபள்ளி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நவீன் ரெட்டி அந்த மாணவியை கீழே தள்ளியுள்ளார். இதில் மாணவி தலையில் அதிகமாக அடிபட்டு ரத்தம் வந்து அந்த மாணவி அங்கேயே உயிரிழந்துவிட்டார்.
இதில் பதறிய நவீன் ரெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் தீவிரமாக விசாரித்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து நவீன் ரெட்டியுடன் அந்த மாணவி செல்வதை கண்டறிந்துள்ளனர். பின்னர் நவீன் ரெட்டியை தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிடித்து உள்ளனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், நவீன் ரெட்டி தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளான். பின்னர் அந்த மாணவியின் சடலத்தையும் காண்பித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…