இன்ஸ்டாகிராம் புரொஃபைலை நீக்கிய ஆர்யன் கான்…குழப்பத்தில் ரசிகர்கள்..!

Published by
Edison

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கியதால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கிவிட்டார். 23 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.எனினும்,ஆர்யன் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தும் நபர் அல்ல.ஏனெனில், 2013 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததிலிருந்து 24 போஸ்டுகள் மட்டுமே பகிர்ந்துள்ளார்.இந்த நிலையில்,சமூக ஊடக தளத்திலிருந்து தனது புகைப்படத்தை நீக்கியுள்ளார்.இதனால்,அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் இருந்தது தொடர்பான வழக்கில் ஆர்யன் கானை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்தனர். ஆர்யனின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் இளம் மாடல் முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரையும் என்சிபி கைது செய்தது.இதனையடுத்து,ஆர்தர் ரோடு சிறையில் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு கடந்த சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பிய ஆர்யன் கான், வீட்டுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்து,ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.

எனினும்,சட்ட விரோத நடவடிக்கைகளில் இனி ஈடுபடாமல் இருப்பது,ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகை வழங்குவது,சாட்சியங்களை கலைக்காமல் இருப்பது,குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது,பாஸ்போர்ட் ஆவணத்தை சிறப்பு நீதிமன்றத்திடம் சமர்பிப்பது,வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடாமல் இருப்பது,மும்பை நகரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்வது என பல்வேறு நிபந்தனைகளின்கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,ஆர்யன் வெளியான பிறகு கரண் ஜோஹர், ஷனாயா கபூர், ஹன்சல் மேத்தா உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் அன்பை பகிர்ந்தனர். அதே நேரத்தில் அவரது சகோதரி சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் தம்பியுடனான தனது அன்பை வெளிப்படுத்த அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

4 minutes ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

38 minutes ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

8 hours ago

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

10 hours ago