Pakistani Parents [file image]
பாகிஸ்தான் : கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 வயது சிறுமியை 72 வயது முதியவர் திருமணம் செய்வதை சார்சத்தா மாவட்ட போலீசார் வெற்றிகரமாக தடுத்து மணமகனை கைது செய்தனர்.
விசாரணையின் பின்னணியில் சிறுமியின் தந்தையான ஆலம் சையத் தனது 12வயது மகளை முதியவருக்கு 5,00,000 ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. பின்னர், திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு, இறுதியில் திருமண நடைபெற இருக்கும் சற்று முன், தகவலறிந்து வந்த போலீசார், மணமகன் ஹபீப் கான் என அடையாளம் காணப்பட்டதோடு, திருமணத்தை நடத்தும் நபரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தை, 72 வயதான மணமகன் மற்றும் ஒரு அதிகாரி மீதும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிறுமியின் தந்தை தப்பியோடியுள்ளார்.
குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், சட்ட அமலாக்க முகவர் ராஜன்பூர் மற்றும் தட்டாவில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நிறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…