ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிகுஞ்சா தால், தற்போது ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், தனது தந்தையை இழந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரது பணியைத் தொடங்கிய நிகழ்வு அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிகுஞ்சா தால் 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து வந்தார். தற்போது இவர் ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். நிகுஞ்சா தாலின் தந்தை நேற்று முன்தினம் காலமானார். தந்தையின் இறுதி சடங்குங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, தனது தனிப்பட்ட துன்பங்களை துடைத்துக்கொண்டு, 24 மணி நேரத்திற்குள் அவரது கடமையையாற்ற பணியில் சேர்ந்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி நிகுஞ்சா தால் தன்னலமற்ற செயலால் அனைவராலும் பாராட்டப்பட்டார். பின்னர் மக்களுக்கு சேவை செய்வதற்கு இவர் ஒரு முன்மாதிரி என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.
உலக முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்ற கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி, இதுவரை 147 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41 பேரும், கேரளாவில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதானால் அங்கு தீவிர நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில், தனது தந்தை இறந்த 24 மணி நேரத்திற்குள் மக்களுக்காக சேவை செய்ய வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரான நிகுஞ்சா தாலுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…