சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு ...!

An FIR has been registered against actress Kangana Ranaut for hurting the feelings of Sikhs.

சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள் என ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலில் போட்டு நசுக்கினார் எனவும் அவர் மறைமுகமாக அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது சீக்கியர்கள் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது மத நம்பிக்கைகளை அவமதிப்பது மூலம் சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.