அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் சி.டபிள்யூ.ஆர்.சி குழு இன்று காலை காசிரங்கா பகுதியை சுற்றியுள்ள அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை மீட்டனர்.
அஸ்ஸாம் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டாக நடத்தப்படும் வனவிலங்கு பராமரிப்பு வசதியான வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் இந்த காண்டாமிருக குட்டி கண்காணிக்கப்படுகிறது.
இதற்கிடையில் 50% பரப்பளவு நீரில் மூழ்கியுள்ளதால் இந்த பூங்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் வனத்துறை அறிக்கையின்படி, இந்த வெள்ள பருவத்தில் மொத்தம் 151 விலங்குகள் உயிரிழந்தது.
அசாமில் இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மொத்தம் 112 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, 4 மாவட்டங்கள் வெள்ளநீரின் கீழ் மூழ்கியுள்ளது.
40 கிராமங்களில் மொத்தம் 29603 மக்களும் 3056 ஹெக்டேர் நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3015 பெரிய விலங்குகள், 1780 சிறிய விலங்குகள் மற்றும் 1974 கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல் படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தேமாஜி பக்ஸா. ஆறு நிவாரண முகாம்கள் உள்ளன அந்த நிவாரண முகாம்களில் இதுவரை 62 பேர் உள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…