உ.பியில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்தவரை நடு ரோட்டில் கொலை செய்த கும்பல்.!

Published by
மணிகண்டன்

உத்திர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையத்தில் நில தகராறு பகை காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா மற்றும் அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா ஆகியோரை ஒரு கும்பல் பலத்த ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திரகுமார் மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று முறை உத்திர பிரதேசத்தில் எம்.எல்.ஏவாக இருந்த நிர்வேந்திரகுமார் மிஸ்ராவின் இறப்புக்கு காரணமானவர்களி உடனடியாக தண்டிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையத்தில் மிஸ்ராவின் சடலத்தை வைத்து போராட்டம் நடத்தினர்.

இறந்துபோன மிஸ்ராவுக்கும், சமீர் குப்தா மற்றும் ராதேஷ்யம் குப்தா ஆகியோகும் நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உத்திர பிரதேச யோகி அரசு மீது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

1 hour ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 hours ago