இனிமேல் பசுவின் சிறுநீரால் தயாரிக்கப்பட்டுள்ள பினாயில் வைத்து மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு 11 கோடி உணவு அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன்பின் நிதி நெருக்கடி காரணமாக இவை அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய பிரதேச மாநில அரசால் வெளியிடப்பட்ட புதிய உத்தரவில் மத்திய பிரதேச அரசு அலுவலகங்கள் இனி பசுவின் சிறுநீரால் செய்யப்பட்ட பினாயில் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில பொது நிர்வாகத் துறையின் மூலமும் இதேபோல வேதியியல் பினாயில்களுக்கு பதிலாக மாட்டின் சிறுநீரில் தயாரிக்கப்பட்ட பினாயிலுக்கு மாறவண்டும் என அறிவித்திருந்தது.
இந்த நடைமுறை மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நடைபெறக்கூடிய பசுக்கள் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை மூலமாக மாட்டு சிறுநீரில் பாட்டில் ஆலை அமைப்பது ஊக்குவிக்கப்படும் எனவும், மாட்டு மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைப்பது அதிகரிக்கப்படும் எனவும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…