கொரோனோவை எதிர்கொள்ள இன்று கூடுகிறது ஜி-20 அமைப்பு… இன்று கொரோனோ தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை… வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாரத பிரதமரும் பங்கேற்பு…

Published by
Kaliraj

கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து, ‘ஜி – 20’ அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த ஆலோசனை  ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்க இருக்கும் இந்த சந்திப்பில்,நமது பாரத  பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தெற்காசிய நாடுகளின் பிராந்திய்ய கூட்டமைப்பு எனப்படும்  சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், நமது பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தற்போது, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என அனைத்து நாடுகளும் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசியுள்ளார். இந்த மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி – 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, தற்போது, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி – 20 அமைப்பில்,

  • அர்ஜென்டினா,
  • ஆஸ்திரேலியா,
  • பிரேசில்,
  • கனடா,
  • சீனா,
  • ஜெர்மனி,
  • பிரான்ஸ்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • இத்தாலி,
  • ஜப்பான்,
  • மெக்சிகோ,
  • ரஷ்யா,
  • சவுதி அரேபியா,
  • தென் ஆப்ரிக்கா,
  • தென் கொரியா,
  • துருக்கி,
  • பிரிட்டன் மற்றும்
  • அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள்  தவிர, ஐரோப்பிய யூனியனும் இந்த கூட்டத்தில்  இடம்பெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று, ஜி – 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடக்க உள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

34 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

3 hours ago