G20 Summit [Image Source : AsiaOne Magazine]
இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், டெல்லியில் ஜி-20 உச்சிமாநாட்டை ஒட்டி, நாளை (செப்-8ம் தேதி) தேசிய நெடுஞ்சாலை 48 இல் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். இதனால் குருகிராம் நகரின் சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அதன்படி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், எச்சரிக்கையுடன் பயணத்தை குறைக்க வேண்டும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நாளை அதாவது 8 செப்டம்பர் 2023 அன்று வீட்டிலிருந்து வேலை செய்ய வழிகாட்டுமாறு குருகிராம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…
சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…
விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…
டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…