murmu [Imagesource : File image]
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் அவரை அனைவருமே, காந்தியடிகளை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், டெல்லியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தேசத்தின் நலனுக்காக, மகாத்மா காந்தியடிகளின் போதனைகளை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மரியாதை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்திஜி ஒரு தனிநபர் மட்டுமல்ல, அவர் ஒரு சித்தாந்தம் மற்றும் நமது மகத்தான தேசத்தின் தார்மீக திசைகாட்டி.
சத்தியம், அகிம்சை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகவாழ்வு ஆகிய அவரது இலட்சியங்களுக்கு நிரந்தரமான மதிப்பு உண்டு. அவரது கொள்கைகளுக்கு அவரது ஜெயந்தியில் தலைவணங்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…