ஜெமினி சர்க்கஸ் நிறுவனர் ஜெமினி சங்கரன் தனது 99 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்திய சர்க்கஸ் நிறுவனத்திற்கு முன்னோடியும் ஜெமினி சர்க்கஸ் நிறுவனருமான ஜெமினி சங்கரன், உடல்நலக்குறைவால் தனது 99-வது வயதில் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு (ஏப்ரல் 23ம் தேதி) இரவு ஜெமினி சங்கரன் உயிரிழந்துள்ளார். ஜெமினி சங்கரன் அவர்களுக்கு, அஜய் ஷங்கர், அசோக் சங்கர் என்ற இரண்டு மகன்கள் மற்றும் ரேணு சங்கர் என்ற ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய சர்க்கஸ் கலைக்கு சங்கரன் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் தந்திரங்களை உள்ளடக்கிய ஜெமினி சங்கரன் இந்திய சர்க்கஸை நவீனப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் என்றும் அவர் கூறினார்.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…