நாளை முதல் தங்கப் பத்திர விற்பனை; கிராமுக்கு ரூ.4,791 நிா்ணயம் ..!

Published by
murugan

8-வது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு தொடக்கியது. 2021 மாா்ச் இறுதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது. பங்குச் சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான 8-வது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறவுள்ளது. தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கத்தின் விலையை மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயத்துள்ளது. அதன்படி, இந்த முறை ஒரு கிராமுக்கு ரூ.4,791 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில், ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,741 ஆக இருக்கும். இந்த திட்டம் டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது டிசம்பர் 3 வரை தங்கப் பத்திரங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது.

தங்கப்பத்திர வெளியீட்டு திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். அதே நேரத்தில், அரசு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியையும் வழங்குகிறது. அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை ஆகியவற்றின் மூலமாக முதலீட்டாளா்கள் தங்கப்பத்திரங்களை வாங்கலாம்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago