மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவைத் துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஸ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறக்கப்பட்டார் .
எனவே இதற்கு முன்னதாகவே அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பித்தார். மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் வெற்றிபெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.குரல்
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…