மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவைத் துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஸ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறக்கப்பட்டார் .
எனவே இதற்கு முன்னதாகவே அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பித்தார். மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் வெற்றிபெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.குரல்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…