இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்..! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு ..!

Published by
murugan

ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை  நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது.

இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும்  எளிமையாக பணம் எடுக்க ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமலே ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்காக கடந்த மார்ச் மாதம்  15-ம் தேதி முதல் சில இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இந்த முறை சோதனை வைத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இனி யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி  ஏ.டி.எம்மில்  கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம் செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.

இந்த யோனோ மொபைல் ஆப்  மூலம் 6  ரகசிய எண்ணை கொண்டு வாடிக்கையாளர்கள்  பணத்தை எடுக்க முடியும் . இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனை மூலமாக  ரூ.10000 வரை எடுக்க முடியும். ஒரு நாளைக்கு 2 முறை மட்டும்  இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.

 தற்போது நாடு முழுவதும் 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் பாயிண்டுகள் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

7 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

8 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

9 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

9 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

10 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

10 hours ago