ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது.
இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எளிமையாக பணம் எடுக்க ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமலே ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் சில இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இந்த முறை சோதனை வைத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இனி யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி ஏ.டி.எம்மில் கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம் செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த யோனோ மொபைல் ஆப் மூலம் 6 ரகசிய எண்ணை கொண்டு வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியும் . இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனை மூலமாக ரூ.10000 வரை எடுக்க முடியும். ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.
தற்போது நாடு முழுவதும் 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் பாயிண்டுகள் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…