தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர் .! வெளிவிவகார அமைச்சகத்தை நாடிய பெண் .!

Published by
Ragi

தொலைபேசியில் மூன்று தலாக் கூறிய கணவரிடம் முறைப்படி விவகாரத்து வாங்கி தருமாறு வெளிவிவகார அமைச்சகத்திற்கு பெண் கடிதம் எழுதியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு புதன்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து தனது 40 வயதான கணவர் போன் வழியாக மூன்று தலாக் கூறி விவகாரத்து செய்ததாக அறிவித்திதாகவும் , அவரிடமிருந்து தனக்கு அதிகாரப்பூர்வமான விவாகரத்து வாங்கி தருமாறும் கூறியுள்ளார் .

அவர் எழுதிய கடிதத்தில், சோமாலியா நாட்டை சேர்ந்த தனது கணவரான அப்தி வாலி அகமது தற்போது அமெரிக்காவின் பாஸ்டனில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் , அவரிடம் பேசி தனக்கு அதிகாரப்பூர்வமான விவாகரத்து வாங்கி தருமாறு அமெரிக்காவின் இந்திய தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் விரைவில் நீங்கள் தலையிட்டு நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்ட சபா பாத்திமா எந்தவொரு உண்மையான விவகாரத்து ஆவணங்களும் இல்லாமல் என்னால் மறுமணம் செய்து கொள்ள இயலாது என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அகமது நல்ல பையன் என்று கூறி எனது குடும்பம் 2015-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி என்னை திருமணம் செய்து வைத்தனர். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னை பார்க்க ஹைதராபாத்திற்கு அகமது வருவார் என்றும், அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறி சபா, கடைசியாக அவர் என்னை இந்தாண்டு பிப்ரவரி மாதம் தான் பார்க்க வந்ததாக கூறினார்.

அதனையடுத்து அமெரிக்காவில் ஓட்டுநராக வேலை கிடைத்த பின்னரும் தன்னுடன் தொடர்பில் இருந்த அவர் தனக்கு பணம் அனுப்பி தந்ததாகவும் பாத்திமா கூறினார் ‌. அதனையடுத்து அக்டோபர் 7-ம் தேதி அகமது எனது தந்தையை தொலைபேசியில் அழைத்து எந்த காரணமும் கூறாமல் மூன்று தலாக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அதனையடுத்து அவரிடம் நான் பலமுறை கால் செய்து வாக்குவாதம் செய்தேன். இருப்பினும் அவர் காரணத்தை கூறாமல் என்னையும், எனது குடும்பத்தின் எண்களையும் பிளாக் செயதார். அதன்பின் அவரது அம்மா மற்றும் தனது மைத்துனருக்கு கால் செய்ததாகவும், முதலில் நீதி வாங்கி தருவதாக கூறிய அவர்கள் அதன்பின் எங்களது அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டதாக பாத்திமா கூறினார். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனில்லாததால் வெளிவிவகார அமைச்சகத்தை நாடியதாக கூறினார். எனவே தனக்கு விரைவில் நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

17 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

55 minutes ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago