மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!

Published by
Rebekal

வெவ்வேறு ஜாதியில் திருமணம் செய்ததால், மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்

ஹைதராபாத்தில் உள்ளம் ஹேமந்த் என்பவரும் அவந்தி எனும் பெண்ணும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் திருமணம் முடித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதால் அடிக்கடி பெண் குடும்பத்தினரால் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது 10 லட்சத்திற்கு கொலைக்கு ஆள் ஒருவரை வைத்து, அவரின் தந்தை தாய் மற்றும் மாமா ஆகியோர் ஹேமந்த்தை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர்.இதன்படி அந்த கொலையாளி ஹேமந்த்தையும் கௌரவக் கொலை செய்துள்ளார் என போலீஸ் துணை ஆணையர் வெங்கடேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹேமந்த்தின் மனைவி கூறுகையில், நானும் ஹேமந்ததும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். அதற்கு என்னுடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் போலீசாரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு இரு புறமும் சமரசமாக தான் இருந்தோம். ஆனால் இவர்கள் இவ்வாறு ஒரு திட்டம் தீட்டுவது எனக்கு இன்று வரையில் தெரியவில்லை. அப்படியே இவர்கள் நான் வேறு ஜாதியில் திருமணம் செய்து இருக்கிறேன் எனும் காரணத்தை கோபமாக வைத்திருந்தாலும் என்னை தானே கொலை செய்திருக்க வேண்டும், ஏன் என் கணவரை கொலை செய்தார்கள்? என கதறியபடி கூறியுள்ளார். மேலும் அவரது தந்தையும் மாமனாரும் தான் இந்த கொலையில் முக்கிய காரணமாக இருப்பார்கள் ஏனென்றால் அவர்கள்தான் மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் எனவும் அவர் கூறியுள்ளார். மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, ஹேமந்த்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago