நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேச்சால் பரபரப்பு.
முன்னாள் கர்நாடக முதல்வரும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவருமான எச்.டி.குமாரசாமி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். காங்கிரஸ் கட்சியுடனான எனது கூட்டணி காரணமாக 2006-2007 மற்றும் 12 ஆண்டுகளில் நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன்.
காங்கிரஸுக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால், நான் இப்போதுவரை முதல்வர் பதிவில் நீடித்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 2018-ல் முதல்வரான பிறகு ஒரு மாதத்தில் நான் ஏன் கண்ணீர் சிந்தினேன்? என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். பாஜக 2013-ல் எனக்கு தீங்கு செய்யவில்லை, காங்கிரஸ் எனக்கு செய்தது தான் என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
இதனிடையே, ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி முன்பு காங்கிரஸ் கட்சியை ‘குதிரை வணிகம்’ என்று அழைத்திருந்தார். அரசியல் கட்சிகளைப் பிரிப்பதிலும், சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதிலும் காங்கிரஸ் திறமையானவர் என்றும் அதனால்தான் ‘குதிரை வர்த்தகம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…