முக்கிய அறிவிப்பு : கொரோனாவின் 6 புதிய அறிகுறிகள் !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலகில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபரை அடையாளம் காண காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற 3 அறிகுறிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 புதிய அறிகுறிகளை அறிவித்துள்ளனர்.
தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர் காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைதல் மற்றும் கண் சிவப்பாக மாறுதல் போன்ற 6 புதிய ஆறிகுறிகளை மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் பட்டியலிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு 2 முதல் 14 நாள்களுக்குள் தென்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025