அதிகரிக்கும் கொரோனா தொற்று…! ஏப்ரல் 26-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்…! – பினராயி விஜயன்

Default Image

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இக்கூட்டமானது ஆன்லைன் மூலம் காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். கேரளாவில் இதுவரை 13.22 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai