சொந்த தேவை இருந்த போதும் இந்தியா 123 நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

According to Union Health Minister Harshwardhan, India has so far distributed corona vaccines to 123 countries, despite the need for the vaccine.

இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைகள் இருந்தபோதிலும் 123 நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் மக்கள் கடைபிடித்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்பொழுது கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே உலகின் பல நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற பிற நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று நடைபெற்ற அணிசேரா நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்கள், இந்தியா எப்போதும் அனைவரின் சுதந்திரத்திற்காகவும் பாடுபடும் என கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு சொந்த தேவை இருந்த போதிலும் கூட 59 அணிசேரா நாடுகள் உட்பட 123 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேம்படுத்தக்கூடிய உலகம் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக உள்ளதாகவும், எல்லோரும் பாதுகாப்பு அடையும் வரை யாரும் பாதுகாக்க பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.