இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தூரில் பரபரப்பான சாலைகளில் ஒன்றான ரசோமா சதுக்கத்தில் இந்த நடன வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரேயா கல்ரா என்ற ஒரு பெண் மாடல், 30 வினாடி வீடியோவில் நடனமாடியுள்ளார். அங்கிருந்த சிக்னல் சிவப்பு நிறம் அடைந்தவுடன், அந்த பெண் திடீரென்று ஜீப்ரா கிராசிங்கில் ஆட ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்துள்ளார்.
சிக்னல் விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில் ஸ்ரேயா நடனமாடியுள்ளார். மேலும் தனது வீடியோ மூலம் முகமூடி அணியுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கான நோட்டீஸை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள டிஎஸ்பி, மற்றவர்களுக்கு அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரேயா கல்ரா தனது சமூக ஊடகத்தில் எடுத்த வீடியோவை உருவாக்கியதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் நோக்கத்தில் இதை எடுக்கவில்லை என்றும், முகமூடி அணிவது மற்றும் சிவப்பு விளக்கில் வாகனங்களை நிறுத்தி வைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே இதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
வேறு யாரையும் பாதிக்கும் நோக்கத்தில் நான் இதை செய்ய விரும்பவில்லை. மேலும், இந்த வீடியோ தவறான வழியில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…