Categories: இந்தியா

சர்வதேச யோகா தினம்: 180க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது… பிரதமர் மோடி பெருமிதம்.!

Published by
Muthu Kumar

9 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்று மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மாலை 5:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக கூறினார்.

மேலும் இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த யோகா தினத்தில் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. கடந்த 2014 இல் யோகா தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுக்கு எண்ணற்ற நாடுகள் தங்களது ஆதரவை வழங்கினர் என்று மோடி தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டார்.

ஓஷன் ரிங் ஆஃப் யோகா பற்றி பேசிய பிரதமர் மோடி, ‘ஓஷன் ரிங் ஆஃப் யோகா’ இந்த ஆண்டு யோகா தின நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது. வளைந்து கொடுக்கும் தன்மை, வலிமை, சமநிலை மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தும் திறன் காரணமாக உலகம் முழுவதும் யோகா புகழ் பெற்றதாக மோடி கூறினார்.

இந்த ஆண்டு யோகா தினத்தில் கருப்பொருளாக ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்’ என்ற வடிவத்தில் அனைவரின் நலனுக்கான யோகா, அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச் செல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.யோகா மனநலப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நன்மை பயக்கும் எனவும் வழக்கமான யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago