Categories: இந்தியா

சர்வதேச யோகா தினம்: 180க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது… பிரதமர் மோடி பெருமிதம்.!

Published by
Muthu Kumar

9 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்று மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மாலை 5:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக கூறினார்.

மேலும் இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த யோகா தினத்தில் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. கடந்த 2014 இல் யோகா தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுக்கு எண்ணற்ற நாடுகள் தங்களது ஆதரவை வழங்கினர் என்று மோடி தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டார்.

ஓஷன் ரிங் ஆஃப் யோகா பற்றி பேசிய பிரதமர் மோடி, ‘ஓஷன் ரிங் ஆஃப் யோகா’ இந்த ஆண்டு யோகா தின நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது. வளைந்து கொடுக்கும் தன்மை, வலிமை, சமநிலை மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தும் திறன் காரணமாக உலகம் முழுவதும் யோகா புகழ் பெற்றதாக மோடி கூறினார்.

இந்த ஆண்டு யோகா தினத்தில் கருப்பொருளாக ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்’ என்ற வடிவத்தில் அனைவரின் நலனுக்கான யோகா, அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச் செல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.யோகா மனநலப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நன்மை பயக்கும் எனவும் வழக்கமான யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

6 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

7 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

8 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

8 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

8 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

9 hours ago