மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் மீதான தாக்குதல் – ராகுல் காந்தி

Default Image

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றம் செயயப்பட்டது.இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது.

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனேவ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.

இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் பட்டியலாவில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் மீதான தாக்குதல்.நாட்டின் பொருளாதாரத்துடைய முதுகெலும்பான சிறு, குறு வணிக தொழில்களை கொரோனா ஊரடங்கின் போது மோடி அரசு அழித்துள்ளது. ஹத்ராஸ் சம்பவம் உயிரிழந்த இளம்பெண் குடும்பம் தனியாக இல்லை, அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்.பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை உத்தரப்பிரதேச அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால் இது தொடர்பாக பிரதமர் மோடி எதுவும் பேசாமல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்