Naresh Goyal - Anita Goyal [ Image source : Getty Images]
சென்னை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் இன்று மும்பை மருத்துவமனையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா கோயல் இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது,
அனிதா கோயலின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நரேஷ் கோயல் – அனிதா தம்பதிக்கு நம்ரதா மற்றும் நிவான் கோயல் என இரு குழந்தைகள் உள்ளனர். பணமோசடி வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் கடந்த செப்டம்பர் 1, 2023 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த மே 6ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
அனிதா கோயலை போலவே நரேஷ் கோயலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ காரணங்களை கூறி நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் ஜாமீன் பெற்று இருந்தார். இதே பண மோசடி புகாரில் அனிதா கோயலும் கடந்த நவம்பர் 2023இல் கைது செய்யப்பட்டு உடல்நிலை கருத்தில் கொண்டு அன்றைய தினமே ஜாமீன் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…