Sanjay Raut [Image Source : Twitter /@rautsanjay61]
ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என யுபிடி தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக அனுசரிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவைச் சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ஜூன் 20ம் தேதி ராஜினாமா செய்தது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் 50 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கவிழ்க்க பாஜக தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இதைத் திட்டமிட்டது என்றும் உத்தவ் தாக்கரே உடல்நலப் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில் இவ்வாறு நிகழ்ந்ததாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
எனவே, ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக அனுசரிக்கப்படுவது போல் ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக ஆக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். துரோகிகளை உலகம் நினைவு கூரும் வகையில் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…