ராஜஸ்தான் மாநிலத்தில் உருமாறிய கொரோனோவான கப்பா வைரஸ் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் பகுதியில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது இந்த கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, லாம்டா, கப்பா என பல வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது.
இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில் கப்பா வைரஸ்-ம் பரவ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் இருவருக்கு கப்பா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா, இதுவரை ராஜஸ்தானில் 11 பேருக்கு உருமாற்றம் அடைந்த கப்பா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஆல்வார் மற்றும் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
மற்றவர்கள் பார்மர் மற்றும் பில்வாராவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா வகை கொரோனாவுடன் ஒப்பிடும் பட்சத்தில் இந்த கப்பா வைரஸ் வீரியம் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…