ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கான 370ஆவது சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு லடாக் சட்டபேரவையற்ற யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு&காஷ்மீர் சட்டபேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு&காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெஹபூபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.முதலில் அவர்கள் அரசு பங்களாக்களில் சிறை வைக்கப்பட்ட அவர் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 7ல் இருந்து வீட்டுக் காவலில் உள்ளார்.
அவருடைய காவல் இன்று முடிவடையும் நிலையில் தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் முதல்வரான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கடந்த பிப்ரவரி மாதத்தில் விடுவிக்கப்பட்டார். அவருடைய மகனும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடந்த மார்ச் மாதத்தில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி மீதான பொது பாதுகாப்பு சட்டக் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…