கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்! திமுக சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை மனு!

Published by
மணிகண்டன்

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு நாகரீகம் தோன்றியதற்கான  ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கால்நடைகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள்  கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தொல்லியல் துறை ஆராய்ச்சிகளின் முடிவு வெளியாகியுள்ளது.

இந்த கீழடி ஆராய்ச்சியானது 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இந்த ஆராய்ச்சியில் கிடைக்கப்பற்ற  பொருள்கள் சேகரிக்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழடி ஆராய்ச்சி பற்றிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதனை கடிதமாக எழுதி மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங்கிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் உத்தரபிரதேசத்தில் சனகோவ்லி எனும் இடத்தில் இதேபோல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் கீழடி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், அடுத்ததாக குஜராத் மாநிலம் வாட் நகரில் இதேபோல தொல்லியல் ஆராய்ச்சி அங்கு நடைபெற்று அங்கு தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதேபோல தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஒன்று கீழடியில் அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல கீழடி அருகில் மதுரையில் தொல்லியல் துறை கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்படும் வேண்டும். என கோரிக்கைகள் அக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தன.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி.எம்பியும், கார்த்திக் சிதம்பரம்.எம்பியும் மற்றும் வெங்கடேசன்.எம்பியும் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்களிடம் நேரில் வழங்கினர்.

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

4 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

32 minutes ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

55 minutes ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

12 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago