நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.., கேரள வங்கியின் முக்கிய அறிவிப்பு.!

திருவனந்தபுரம் : வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி.
கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கேரள வங்கியின் வங்கி ஊழியர்களும் தானாக முன்வந்து தங்களது ஐந்து நாள் சம்பளத்தை நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.
கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நடத்தும் கேரளா வங்கி (அனைத்து கூட்டுறவு வங்கி) சுமார், ரூ.6,65,000 கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 51 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தற்போது 15 நிவாரண முகாம்களில் 1,770 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025