கேரள தங்கக் கடத்தல் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

The NIA has filed charges against 20 people, including Swapna Suresh and Sarith, in a gold smuggling case..

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தங்கக்கடத்தல் விவகாரத்தில், பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இந்த வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.