கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலை ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு கோவிலுக்கான வலைத்தளமான ‘spst. in’ மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும்,பக்தர்கள் சன்னதிக்கு வரும் போது ஆன்லைனில் முன்பதிவு செய்த நகலையும், அதனுடன் அசல் ஆதார் கார்டையும் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் 35 பேர் என்ற எண்ணிக்கையில் ஒருநாளில் அதிகபட்சமாக 665 பேர் மட்டுமே கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலின் உள்செல்பவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசர் மற்றும் சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே கோவிலினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவிலில் பக்தர்களுக்கான தரிசனம் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை 6.45 வரையிலும் திறந்திருக்கும் என்று நிர்வாக அதிகாரி வி. ரத்தீஷன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…