கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சென்ற ஆண்டு சில பெண்கள் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில் சபரிமலைக்கு சென்று வந்தனர்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வானது, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்திருந்தனர். இதனால், ஏற்கனவே உள்ள தீர்ப்பான, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவில் செல்லலாம் என்கிற விதிமுறை தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சீராய்வு மனுக்குகளுக்கு முன்னரே சபரிமலைக்கு என தனி சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால் சீராய்வு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தனி சட்டத்தை கேரள அரசு உருவாக்காமல் இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு,சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் சபரிமலை நிர்வாகம் தொடர்பாக தனி சட்டம் அமைக்க வேண்டும் எனவும் அந்த சட்டம் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் எனவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…