முதியவர்கள் அதிகம் கொண்ட கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் – கேரள சுகாதார துறை மந்திரி மத்திய அரசுக்கு கடிதம்!

Published by
Rebekal

கேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட அளவு டோஸ்கள் ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் நேற்று வரை 94 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு, 38% முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

23 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு அம்மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அதிக முதியவர்களை கொண்ட மாநிலமான கேரளாவிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாவது முன்னுரிமைதாரர்களாகிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி தங்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏற்கனவே விடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கும் படியாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

7 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

7 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

8 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

9 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

9 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

10 hours ago