மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

Default Image

2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு, குறு நிறுவனங்களும் சரிவர தங்கள் ஸ்தாபனத்தை இயக்க முடியாமல் திணறினர். இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு காலவரையறையை நீட்டித்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 – 19 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 30ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போக, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசமானது 2021 மார்ச் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts