டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹைதராபாத்திற்கு தெற்கே 156 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக என்.சி.எஸ் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. இதுபோன்று தலைநகர் டெல்லியில் இன்று காலை 6.42 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி மெட்ரோ சேவைகள் சிறிதளவு பாதித்ததாகவும், பயணிகள் சிக்கித் தவித்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லேசான நிலநடுக்கம் காரணமாக ஒரு நிலையான நடைமுறையை பின்பற்றி ரயில்கள் எச்சரிக்கையான வேகத்தில் இயக்கப்பட்டு பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டன. இப்போது சேவைகள் சாதாரணமாக இயங்குகின்றன என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று மாலை சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புக்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…